கையெடுத்து கும்பிட்ட ஆசிரியர்.. உடைந்து அழுத மாணவர்கள் - கண்ணீர் வர வைக்கும் நெகிழ்ச்சி காட்சிகள்

x

மயிலாடுதுறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியரை மீண்டும் பணியமர்த்த வலியுறுத்தி திரைப்பட பாணியில் மாணவ, மாணவிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

சித்தர்காடு கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த ஆர்.சந்திரசேகரனை, மாணவிகளை அடித்ததாக, பள்ளி நிர்வாகம் பணிநீக்கம் செய்தது.

இதையறிந்த 11 ,12- ஆம் வகுப்பு மாணவர்கள், பள்ளி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து விசாரணை நடத்திய மாவட்ட கல்வி அலுவலர், அவரை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிட்டார்.

இதையடுத்து பள்ளிக்கு வந்த ஆசிரியர் சந்திரசேகரனை மாணவ, மாணவிகள் உற்சாகமாக வரவேற்று, பாதம் தொட்டு வணங்கி, வகுப்பறைக்கு அழைத்துச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்