திடீரென கருமையாக மாறிய சிறுமியின் உடல்; அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்

x

விழுப்புரம் அரசு மருத்துவமனையில், மருத்துவர் அளித்த தவறான சிகிச்சையால், பள்ளி சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வானூர் அடுத்த கிளியனூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சுகுமார் என்பவரின் மகள் சஞ்சனா, அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன் ஏற்பட்ட உடல்நலக்கோளாறால், உப்பு வேலூர் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மருத்துவர் கணேசன் அளித்த தவறான சிகிச்சையால் சிறுமியின் உடல் கருமையாக மாறியுள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்கள், சிறுமியை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், அரசு மருத்துவமனை மருத்துவர் கணேசன் மீது சிறுமியின் பெற்றோர் போலீசில் புகாரளித்தனர்.

இதையடுத்து, மருத்துவர் கணேசன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரைக் கைது செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்