அரசு பேருந்து, சுற்றுலா வாகனம், டேங்கர் லாரி மோதி விபத்து - 9 பேர் பலி, 10 பேருக்கு படுகாயம்

x

அரசு பேருந்து, சுற்றுலா வாகனம், டேங்கர் லாரி மோதி விபத்து - 9 பேர் பலி, 10 பேருக்கு படுகாயம்

கர்நாடகாவில் அரசு பேருந்து, சுற்றுலா வாகனம் மற்றும் டேங்கர் லாரி மோதி கொண்ட கோர விபத்தில், 4 குழந்தை உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கர்நாடகாவின் காந்திநகர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்தும், சுற்றுலா வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. அதே நேரம் சுற்றுலா வாகனத்திற்கு பின்னால் பால் ஏற்றி வந்த டேங்கர் லாரியும், சுற்றுலா வாகனம் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் அரசு பேருந்துக்கும், டேங்கர் லாரிக்கும் இடையே சிக்கிய சுற்றுலா வாகனம் நொறுங்கியது. இந்த கோரவிபத்தில் சம்பவ இடைத்தில் 5 பேரும், மருத்துவமனையில் 4 பேரும் என 9 பேர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 10 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்களில் 5 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் ஆன்மீக சுற்றுலாவை முடித்து திரும்பி சென்று கொண்டிருந்ததும் தெரிய வந்தது.


Next Story

மேலும் செய்திகள்