பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து... சுரங்கப்பாதை மழைநீரில் சிக்கியதால் அதிர்ச்சி - கயிறு கட்டி மீட்ட பரபரப்பு காட்சிகள்

x

மதுரை அருகே சுரங்கப்பாதையில் தேங்கி இருந்த மழைநீரில், அரசு பேருந்து சிக்கிக் கொண்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். மதுரை சுற்றுவட்டாரத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையில், திருப்பரங்குன்றம் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. இந்த நிலையில் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பரங்குன்றத்திற்கு பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து மழைநீரில் சிக்கியது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அவதி அடைந்த நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் பேருந்தை கயிறு கட்டி இழுத்து மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்