கலாஷேத்ரா பாலியல் புகார் விவகாரம் - ஆளுநர் தமிழிசை சவுந்த‌ர‌ராஜன் வேண்டுகோள்

x
  • கலாஷேத்ரா பாலியல் புகார் விவகாரத்தில், தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்த‌ர‌ராஜன் தெரிவித்துள்ளார்.
  • சென்னை ரோட்டரி சங்கம் மூலம் பெண்களுக்கான உடல் மற்றும் மன நல நிகழ்ச்சி தரமணியில் நடைபெற்றது.
  • இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்
  • . நிகழ்ச்சியில் பேசிய அவர், முக மேக்கப்பிற்கு மாதம் 5 ஆயிரம் செலவு செய்யும் பெண்கள், உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியதுவம் கொடுப்பதில்லை என வேதனை தெரிவித்தார்.
  • தற்போது மார்பக புற்றுநோய் பெண்களுக்கு அதிகம் வருவதாக தெரிவித்த தமிழிசை, பெண்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தினார்.
  • பின்னர் செய்தியாளர்களை சந்தித்த‌ போது, கலாக்சேத்ராவில் பாலியல் புகார் குறித்து கேள்வி எழுப்ப‌ப்பட்டது. அதற்கு, பெண்கள் மீது குற்றச்சாட்டு வந்தால் உடனே விசாரிக்க வேண்டும் என்றார்.
  • பாலியல் புகார்கள் குறித்து பெண்கள் வெளியே சொல்வதே அரிது என்ற அவர், பெண் இனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்