சட்டநாதர் சாமி கோயிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட கோபுர வாசல்.. காரணம் என்ன..?

x

மயிலாடுதுறை சீர்காழி சட்டநாதர் சாமி கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கு கோபுர வாசல் திறக்கப்பட்டது... 32 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 24ஆம் தேதி இவ்வாலயத்தில் குடமுழுக்கு திருவிழா நடைபெற உள்ளது... இங்கு உள்ள 4 கோபுர வாசல்களில் மேற்கு கோபுர வாசல் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டியே இருந்த நிலையில், இன்று தர்மபுரம் ஆதீனம் சிறப்பு பூஜைகள் செய்து மேற்கு கோபுர வாசலைத் திறந்து வைத்தார். புனித நீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து புனித நீர் தெளிக்கப்பட்டு மேற்கு கோபுர வாசல் திறக்கப்பட்ட நிலையில், முதலாவதாக பசு, குதிரை, ஒட்டகம், யானை ஆகியவை சென்று சிறப்பித்தன.


Next Story

மேலும் செய்திகள்