மாணவர்களுக்கு குட் நியூஸ்!.. 10ம் வகுப்பு தேர்வு இன்றுடன் நிறைவு ஆனால் அடுத்த மே 17...

x

தமிழகம், புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றன. கடந்த 6ம் தேதி தேர்வுகள் தொடங்கின. 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வில் பங்கேற்று வந்தனர். நான்கு பாட தேர்வுகள் முடிவடைந்த நிலையில், கடைசி தேர்வாக சமூக அறிவியல் இன்று நடைபெறுகிறது. தேர்வுகள் இன்றுடன் முடிவடைவதையொட்டி, தமிழகம் முழுவதும் 70க்கும் அதிகமான மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. மே 17 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்