பள்ளி மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி

பள்ளி மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி
x

சென்னை முழுவதும் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து வருகிற 13 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறக்க இன்னும் 2 நாட்களே உள்ளதால் தூய்மை பணியாளர்கள் தீவிரமாக தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும், குடோன்களில் இருந்து பாடப்புத்தகங்கள், சீருடைகள் பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்