வடசென்னை பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

x

வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருவொற்றியூரில் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

வடசென்னை பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இது குறித்து வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, திருவொற்றியூரில் ரயில்வேக்கு சொந்தமான நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆண்டு தற்காலிகமாக வகுப்புகள் தொடங்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்