மின்வாரியத்தில் நல்ல வேலை... ஆசை காட்டி மோசம் செய்த ஊழியர் - ஒரு கோடியே 25 லட்சம் அபேஸ்

x

சிங்கம்பேட்டையை சேர்ந்த மூர்த்தி என்பவர், பவானி மின்சார வாரியத்தில் லைன்மேனாக பணியாற்றி வருகிறார். மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 25க்கும் மேற்பட்டோரிடம் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம், பாதிக்கப்பட்ட மாடசாமி என்பவர் புகார் அளித்தார். இதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், தலைமறைவாக இருந்த மின்வாரிய ஊழியர் மூர்த்தியை கைது செய்தனர். அவரிடம் விசாரணை செய்ததில், ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய்க்கும் மேல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனிடையே, மூர்த்தி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோபி கிளை சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்