சூட்கேசில் பதுக்கப்பட்ட தங்கம்...சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி

x

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மஸ்கட்டில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த 2 இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி அதிகாரிகள் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் இருவரின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர்களது சூட்கேசை சோதனையிட்டபோது தங்கத்தை கம்பி வயர் போல் மாற்றி ஜீப் பகுதியில் சூட்கேஸ் துணியில் தைத்து நூதன முறையில்கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரையும் கைது செய்த சுங்க இலாக அதிகாரிகள்,அவர்களிடமிருந்து 1 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்