கோகுல்ராஜ் கொலை வழக்கு... "சுவாதி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்" - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x
  • கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில், நீதிமன்ற அவமதிப்பு விசாரணையை, சுவாதி எதிர்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது...
  • நீதிமன்றத்திற்கு தவறான தகவலை அளித்ததாக, சுவாதி மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது.
  • இதை எதிர்த்து சுவாதியின் கணவர் ரஞ்சித் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.
  • இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என தெரிவித்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
  • மேலும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவில் தலையிட முடியாது என குறிப்பிட்ட நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு விசாரணையை சுவாதி எதிர்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்