மத்திய அரசு ஊழியர் என பித்தலாட்டம்... மனைவியின் அந்தரங்க வீடியோவை பகிர்ந்த பயங்கரம் - வசமாக சிக்கிய மளிகை கடை மைனர்

x

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ​கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரை கோபிசெட்டிபாளையம் மொடச்சூரை சேர்ந்த லிவிங்ஸ்டன் ஜெயபால் என்பவர் திருமணம் செய்துள்ளார். திருமணத்தின் போது மத்திய அரசில் உணவு பாதுகாப்பு அலுவலராக இருப்பதாக கூறியிருக்கிறார் லிவிங்ஸ்டன் ஜெயபால். திருமணத்தின் போது 23 சவரன் நகை, ஒரு லட்ச ரூபாய் பணம் தரப்பட்ட நிலையில் அந்த பெண்ணை கணவர் வீட்டில் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடமும் பணம் வாங்கி ஏமாற்றியதும் அந்த பெண்ணுக்கு தெரியவந்த சூழலில் தன் பெற்றோரிடம் முறையிட்டுள்ளார். மேலும் தன் மனைவியுடன் நெருக்கமாக இருந்த வீடியோக்களை நண்பர்களுக்கு அனுப்பி வைத்திருப்பதும் தெரியவந்த நிலையில் போலீசார் லிவிங்ஸ்டன் ஜெயபாலை கைது செய்தனர். மளிகை கடை நடத்தி வந்தவர் மத்திய அரசு வேலை என கூறி மோசடி செய்ததும் தெரியவந்த நிலையில் மோசடி உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்