"கோ க்ரீன்" கலாச்சார முன்னெடுப்பு... பச்சை நிற ஜெர்சியில் களமிறங்கும் ஆர்.சி.பி - எந்த போட்டியில் தெரியுமா?

x

ஐபிஎல் தொடரில் வரும் 23ஆம் தேதி நடைபெறும் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில், பெங்களூரு அணி வீரர்கள் பச்சை நிற ஜெர்சியில் களமிறங்க உள்ளனர். "கோ க்ரீன்" என்ற கலாச்சார முன்னெடுப்பை முன்னிறுத்தி இப்போட்டியில் களமிறங்க உள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. வருங்கால தலைமுறையினருக்கு தூய்மை மற்றும் பசுமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பச்சை நிற ஜெர்சி அணிய உள்ளதாகவும், இவை 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் தயாரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்