சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரம்... காவலர்களை கண்மூடித்தனமாக தாக்கும் மக்கள் - வெளியான வீடியோ

x

மேற்குவங்க மாநிலம் காலியாகஞ்ச் பகுதியில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டை எழந்தது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் மரணத்திற்கு நியாயம் கேட்டும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நேற்று உள்ளூர் பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் வன்முறையில் முடிந்தது. சிலர் காலியாகஞ்ச் காவல் நிலையத்திற்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், வன்முறையின்போது ஆத்திரமடைந்த சிலர், காவலர்களை தாக்குவதும், அவர்கள் வலி தாங்க முடியாமல் கதறும் வகையிலான வீடியோ வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்