காதலிக்கு வேறொருவருடன் திருமணம்... தனிமையில் எடுத்த வீடியோக்களை மாப்பிள்ளைக்கு அனுப்பி வைத்த காதலன்

x

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் தரணிதரன். இவர் திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணி புரிந்த போது, உடன் பணியாற்றிய இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதில், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்ட நிலையில், பெண்ணிடம் இருந்து பணம் பறிக்கும் முயற்சியில் தரணிதரன் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், தரணிதரனை விட்டு பிரிந்த இளம் பெண்ணுக்கு வேறொருவருடன் குடும்பத்தினர் திருமண நிச்சயம் செய்துள்ளனர். இதையறிந்து அதிர்ச்சியடைந்த தரணிதரன், நிச்சயம் செய்யப்பட்ட இளைஞருக்கு, இளம் பெண்ணுடன் தனிமையில் இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அனுப்பிய நிலையில், பெண்ணின் திருமணம் தடைபட்டுள்ளது. மேலும், அந்த புகைப்படங்களை தரணிதரன் சமூக வலைதளங்களிலும் பதிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இளம் பெண் போலீசில் புகாரளித்தார். இதனடிப்படையில், தரணி தரனை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்