பச்ச துரோகம் செய்த காதலி.. கடற்கரையில் கொடூர தண்டனை கொடுத்த காதலன்

x

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் இளம் பெண் சிராவணி. இவருக்கு ஏற்கெனவே திருமணம் நடைபெற்ற நிலையில், கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனியே வசித்து வாழ்ந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த கோபால் என்ற இளைஞருடன் சிராவணிக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில், இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதில், சிராவணி பல ஆண்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் நிலையில், இதையறிந்த கோபால் ஆத்திரமடைந்துள்ளார். இந்நிலையில், விசாகப்பட்டின கடற்கரைக்கு சிராவணியை வரவழைத்த இளைஞர், அவரை கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவல் நிலையத்தில் சரணடைந்த கோபாலிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்