தேசியக்கொடி டாட்டூ வரைந்து பொற்கோயில் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் - தீயாய் பரவும் வீடியோ

x

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில், முகத்தில் இந்திய தேசிய கொடியின் டாட்டூவை வரைந்த பெண்ணை, பொற்கோயிலுக்குள் செல்ல விடாமல் தடுக்கப்பட்டார். பெண்ணுடன் இருந்த நபர், இது இந்தியா இல்லையா என கேள்வி எழுப்பிய போது, "இது பஞ்சாப்... இந்தியா அல்ல...." என்று கோயில் ஊழியர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கம் அளித்துள்ள குருத்வாரா பிரபந்த கமிட்டி, கோயில் ஊழியர் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டிருந்தால், மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், பெண்ணின் முகத்தில் வரையப்பட்டிருந்தது இந்திய தேசியக் கொடி அல்ல என்றும், அசோக சக்ரா இல்லை என்றும் கூறியுள்ளது. அது ஒரு அரசியல் கட்சியின் கொடியாக இருக்கும் என கருதியதால் கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்