உடல் நலக்குறைவால் உயிரிழந்த தந்தை... கண்ணீர் மல்க தேர்வு எழுத வந்த மாணவி - ஊக்கமளித்த ஆசிரியர்

x
  • உடல் நலக்குறைவால் உயிரிழந்த தந்தை... கண்ணீர் மல்க தேர்வு எழுத வந்த மாணவி - கண்ணீரை துடைத்து ஊக்கமளித்த ஆசிரியர்
  • கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில், தந்தை இறந்த சோகத்திலும் மகள் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதினார்.
  • வண்டிப்பாளையம் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி ஆதிலட்சுமியின் தந்தை ரவி என்பவர், உடல் நலக்குறை காரணமாக உயிரிழந்தார்.
  • இதற்கிடையில், 10ஆம் வகுப்பு கணித பாடத் தேர்வு இன்று நடைபெறும் நிலையில், தந்தை இறந்த சோகத்திலும் மகள் ஆதிலட்சுமி கண்ணீர் மல்க தேர்வு மையத்துக்கு வந்தார்.
  • அவருக்கு ஆறுதல் கூறிய ஆசிரியர், சக மாணவிகள், அதிக மதிப்பெண் எடுக்கும் வகையில் தேர்வெழுத வேண்டும் என, ஊக்கமளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்