உடலில் பல காயங்களுடன் பெண் குழந்தை மர்ம மரணம்.. தென்காசியில் அதிர்ச்சி..தவிக்கும் ஒற்றை தாய்

x

சங்கரன்கோவில் அருகே, உடலில் பல்வேறு காயங்களுடன் பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம், சந்தேகத்தை கிளப்பியுள்ளது...

தென்காசி மாவட்டம் பெரும்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கியம்மாள். இவரது கணவர் சாலை விபத்தில் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், 4 வயது பெண் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். இதனிடையே, தனது குழந்தையை பக்கத்து வீட்டில் உள்ள உறவினர்களிடம் கொடுத்துவிட்டு மில் வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து, வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், உடலில் பல்வேறு காயங்கள் இருப்பதாகவும், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வந்த போலீசார், குழந்தையின் சந்தேக மரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்