அதிக சத்து மாத்திரையால் மாணவி உயிரிழந்த விவகாரம் - குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் வழங்கிய கலெக்டர்

x
  • உதகையில், அரசு உருது பள்ளியில் அதிகளவு சத்து மாத்திரைகளை உட்கொண்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாணவியின் உடலுக்கு, ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
  • பிரேத பரிசோதனைக்குப் பிறகு, சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து மாணவியின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, பிங்கர் போஸ்ட் கபர்ஸ்தான் பகுதியில், பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.
  • மாணவியின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அறிவித்த 3 லட்சம் ரூபாய் நிவாரண தொகைக்கான காசோலையை, மாவட்ட ஆட்சியர் அம்ரித், அப்போது மாணவியின் பெற்றோரிடம் நேரில் வழங்கி, ஆறுதல் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்