செய்தியாளர் சந்திப்பில் கத்தி கூச்சலிட்ட காயத்ரி ரகுராம்
கோவையில், சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராமுக்கும் செய்தியாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கோவை மாவட்டத்தில் உள்ள குஜராத் சமாஜத்தில், வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு சார்பில் மாநில பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில், பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநிலத் தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த காயத்ரி ரகுமாமிடம், 1998ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் போல் மீண்டும் நிகழ்ந்திருப்பதாக வெளியிட்ட ட்விட்டர் பதிவு குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதனால், செய்தியாளர்கள் - காயத்ரி ரகுராம் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர், அங்கிருந்த பாஜகவினர் செய்தியாளர்களை சூழ்ந்து கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story