சரத்பவாருடன் கெளதம் அதானி திடீர் சந்திப்பு - அரசியல் அரங்கில் திடீர் பரபரப்பு..!

x

அதானி குழும முறைகேடு விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இது குறித்து கருத்து தெரிவித்த சரத் பவார் அதானி குழுமம் குறிவைக்கப் பட்டிருப்பதாக தெரிகிறது என குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை மும்பையில் அவரது இல்லத்தில் அதானி குழும தலைவர் கௌதம் அதானி சந்தித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதானிக்கு எதிராக ராகுல் காந்தி தொடர்ந்து பேசி வரும் நிலையில் கௌதம் அதானி சரத்பவாரை சந்தித்து பேசி இருப்பது அரசியல் அரங்கில் உற்று நோக்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்