குப்பைமேடான முருகன் கோயில் வளாகம்... குவியல் குவியலாய் ரத்த கறை யுடன் ஊசிகள் - பக்தர்கள் அதிர்ச்சி

x

காங்கேயம் அருகே இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலில் குவியல் குவியலாக கிடக்கும் ஊசிகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் வட்டமலை பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமையான முத்துகுமாரசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள 16 கால் மண்டபம் அருகே குவியல் குவியலாக ஆயிரக்கணக்கான ஊசிகள் ரத்த கரையுடன் கிடப்பதால் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அவை போதை ஆசாமிகள் பயன்படுத்திய ஊசிகளாக இருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் சந்தேகிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்