தேவாலயத்தின் முன்பு கொட்டப்பட்ட குப்பை... தட்டிக் கேட்ட பாதிரியார் - சிசிடிவி காட்சி வெளியீடு

x

தேவாலயத்தின் முன்பு கொட்டப்பட்ட குப்பை... தட்டிக் கேட்ட பாதிரியார்... சரமாரியாக தாக்கிய கவுன்சிலரின் கணவர் - சிசிடிவி காட்சி வெளியீடு

கடலூர் முதுநகர் பகுதியில் உள்ள தூய கிறிஸ்தவ நாதர் தேவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் உணவு பரிமாறப்பட்டது. பின்னர் அதன் குப்பைகளை, வழக்கமாக குப்பைகள் கொட்டும் இடத்தில் ஆலய ஊழியர்கள் கொட்டியுள்ளனர். இதனிடையே, தேவாலய நிர்வாகிகள் கொட்டிய குப்பைகளை, துப்புரவு ஊழியர்கள் எடுத்து வந்து, தேவாலய வாயிற்பகுதியில் கொட்டியுள்ளனர். இதனை தட்டிக்கேட்ட தேவாலய ஆயர் பிலிப் ரிச்சர்ட்டை, 42வது வார்டு கவுன்சிலர் விஜயலட்சுமியின் கணவர் செந்தில்குமார் தாக்கினார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியான நிலையில், இந்த சம்பவத்தைக் கண்டித்து, ஆலய நிர்வாகிகள் மற்றும் அங்கு படிக்கும் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் இதுதொடர்பான புகாரின் பேரில், செந்தில்குமாரை கைது செய்த போலீசார், அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்