தொழில் போட்டியால் பழிக்குப்பழி...பட்டப்பகலில் ரவுடி வெட்டிக்கொலை

x

கொல்லப்பட்டவர் சென்னை , கே.கே நகர் அம்பேத்கர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ரமேஷ். திருமணமாகி மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். இவர் ஒரு விசிக பிரமுகர். ரமேஷை ஈவு இறக்கமின்றி இப்படி வெட்டிக் கொலைச் செய்ய காரணம், ரத்தமும் குரோதமும் கலந்த குற்றப் பின்னணி.

ஆம், ரமேஷ் சென்னையில் உள்ள ஏ கிரேட் குற்றவாளிகளில் ஒருவர். கொலை , வழிப்பறி என கோடம்பாக்கம், எம்கேபி நகர், எம்ஜிஆர் நகர், கேகே நகர் காவல் நிலையத்தில் இவர் மீது எட்டிற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

ரவுடிசத்தில் செல்வாக்கை வளர்த்து கொண்ட ரமேஷ் சமீப காலமாக ரியல் எஸ்டேட் பிஸ்னஸில் கொடிக்கட்டி பறந்திருக்கிறார். பெரிய இடங்களை அதிக லாபத்திற்கு விற்றுகொடுத்து ரவுடி ரமேஷ் தொழிலதிபர் அவதாரம் எடுத்துள்ளார்.

இப்படி வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறிக்கொண்டிருந்த வேளையில் தான் எமன் ரமேஷின் உயிருக்கு நாள் குறித்திருக்கிறது. சம்பவம் நடந்த அன்று காலை ரமேஷ் வழக்கம்போல் வாக்கிங் சென்றுள்ளார். பாரதிதாசன் சாலையிலுள்ள டீக்கடையில் நண்வர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது காரில் வந்த முகமுடி கும்பல் ரமேஷை சரமாரியாக தாக்கி கீழே தள்ளியிருக்கிறது.

பிறகு கொலை கும்பலைச் சேர்ந்த இரண்டு பேர் கையில் எடுத்துவந்த கத்தியால் ரமேஷை கண்மூடித்தனமாக வெட்டிச் சாய்திருக்கிறார்கள்


Next Story

மேலும் செய்திகள்