ஆன்லைன் மூலம் மக்களை குறிவைத்த கும்பல்...அதிரடியில் இறங்கிய சைபர் கிரைம்..பெருமூச்சு விட்ட கோவை மக்கள்

x

கோவையில், இணையதளம் மூலமாக இழந்த பணத்தை, சைபர் கிரைம் போலீசார் மீட்டு பொதுமக்களிடம் ஒப்படைத்தனர்..கோவை மாவட்டதைச் சேர்ந்த செல்வகுமரன், ராஜு, விமல்குமார், லதா ஆகியோரடமிருந்து இணையதளம் மூலமாக பல லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் போலீசாரிடம் புகாரளித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் போலீசார் துரிதமாக செயல்பட்டு, 11 லட்சத்து 95 ஆயிரத்து 965 ரூபாய் பணத்தை மீட்டனர். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களுக்குரிய பணத்தையும் போலீசார் ஒப்படைத்தனர். இந்நிலையில், ஆன்லைனில் கூறப்படும் தகவல்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாமெனவும், இணைய வழிக் குற்றங்கள் தொடர்பாக உடனடியாக போலீசாரிடம் புகாரளிக்க வேண்டுமெனவும், காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்