காசுக்கேட்டு மிரட்டிய 'ஓசி' குடி கும்பல்..! தரமறுத்த ஊழியர்களுக்கு அடி, உதை... சின்னாபின்னமாக சிதறிய பேக்கரி - வெளியான பரபரப்பு வீடியோ

x

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பேக்கரியில், மதுபோதையில் புகுந்த சிலர் பணம் தருமாறு ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது போதை ஆசாமி உணவுப்பொருட்களை தள்ளிவிட்டதால், அவரை வெளியேற்ற கடைக்காரர்கள் முயன்றனர். அப்போது ஏற்பட்ட கைகலப்பில் போதை ஆசாமிகள் தாக்கியதில், 3 பேக்கரி ஊழியர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பேக்கரியில் மதுபோதை ஆசாமிகள் தகராறு செய்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்