'Flipkart' அலுவலகத்தில் புகுந்த கும்பல்...துப்பாக்கி முனையில் கைவரிசை - அதிர்ச்சி cctv காட்சி

x

பீகாரில், பிளிப்கார்ட் அலுவலகத்தில் முகமூடி அணிந்தபடி நுழைந்த கும்பல், துப்பாக்கி முனையில் 5 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.

பீகார் மாநிலம் மோதிஹாரி பகுதியில் உள்ள பிளிப்கார்ட் அலுவலகத்தில், முகமூடி அணிந்தபடி 5 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது. அப்போது அங்கிருந்த மேலாளரிடம், துப்பாக்கி முனையில் மிரட்டியபடி, 5 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துவிட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது. இதுதொடர்பான புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த நிலையில், 2 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 5 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்