3 வயது சிறுமியை காட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை - தலைநகரில் பயங்கரம்

x

3 வயது குழந்தையை, இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் தலைநகர் டெல்லியில் அரங்கேறியுள்ளது.

தெற்கு டெல்லியின் ஃபதாபூர் பெரியில் வசிக்கும் 3 வயது சிறுமியை நேற்று முதல் காணவில்லை என பெற்றோர் தேடி வந்துள்ளனர்.

இந்த நிலையில் சிறுமியை இருவர் வனப்பகுதிக்கு அழைத்து சென்றதாக நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார்.

அதனடிப்படையில் வனப்பகுதியில் சென்ற பெற்றோருக்கு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரிய வந்தது.

உடனடியாக மீட்கப்பட்ட சிறுமிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பாலியல் வன்கொடுமை செய்த ராம்னிநிவாஸ் பேனிகா மற்றும் சக்திமான் சிங் ஆகியோரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்