அண்ணன் என நினைத்து தம்பியை வெட்டி கொன்ற கும்பல் - சென்னையில் அதிர்ச்சி

x

சென்னை அயனாவரத்தில், முன் விரோத தகராறில் வீடு புகுந்து வெட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர். வடசென்னை தண்டையார்பேட்டை விநாயகபுரம் பகுதியில் வசித்து வந்த பிரவீன், புவனேஷ் ஆகியோருக்கும் கிரண் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கிரணை தேடி அவனது வீட்டிற்கு கத்தியோடு சென்ற புவனேஷ், பிரவீன் இருவரும் கிரண் என நினைத்து தூங்கி கொண்டிருந்த தம்பியை தலையில் வெட்டியுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரை தேடிய போலீசார், ஃபைபர் படகில் பதுங்கியிருந்த இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்