பிரியாணி கடை உரிமையாளரை சாலையில் வெட்டி கொன்ற கும்பல் - சென்னையில் அதிர்ச்சி

x

சென்னை அயனாவரத்தில் பிரியாணி கடை உரிமையாளரை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொன்றது.

அமைந்தகரை கலெக்டர் காலனி பகுதியை சேர்ந்த நாகூர் கனி, அயனாவரம் பகுதியில் கடந்த இரண்டு வருடங்களாக பிரியாணி கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று மாலை வழக்கம் போல பிரியாணி கடைக்கு வந்த அவர், தனது ஊழியர்களிடம் பேசி விட்டு கடையின் வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது, இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 5க்கும் மேற்பட்டோர் நாகூர் கனியை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்