கணவனை கடத்தி கத்தி முனையில் மனைவியிடம் நகை பறித்த கும்பல்

x

குமாரபாளையத்தை அடுத்த மேட்டுக்கடையைச் சேர்ந்த சத்தியசுந்தரம் என்பவர், ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 19-ஆம் தேதி இரவு, கடையைப் பூட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றபோது வழிமறித்த 4 பேர், காரில் கடத்திச் சென்றனர்.

பின்னர், சத்தியசுந்தரத்தை அவரது மனைவிக்கு தொலைபேசியில் பேசவைத்து, வீட்டுக்கு வரும் நபரிடம் நகைகளைக் கொடுத்தனுப்புமாறு மிரட்டியுள்ளனர்.

அதன்படி, சத்தியசுந்திரத்தின் மனைவியும் வீட்டுக்கு வந்த நபரிடம் 18 பவுன் நகைகளை கொடுத்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

பின்னர், நகையைப் பெற்றுக் கொண்ட அவர்கள், சத்தியசுந்தரத்தை விட்டுவிட்டுச் சென்றனர்.

இதை வெளியில் சொன்னால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அவர்கள் மிரட்டிச் சென்றதால், வெளியே சொல்லாமல் இருந்த சத்தியசுந்தரம், நண்பர்கள் அறிவுறுத்தியதால் குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார்.

அதைத் தொடர்ந்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்திய போலீசார், பெல்ட் குமார் என்கிற குமார், ராஜன், சலீம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

தலைமறைவான பூமிநாதன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்