காந்தி ஜெயந்தி - ஐ.நா பொதுச்செயலாளர் வாழ்த்து

x

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சர்வதேச அகிம்சை தினமான இன்று, ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டேரஸ் மகாத்மா காந்தியை நினைவு கூர்ந்துள்ளார். ஐநா சபை தீர்மானத்தின் படி மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதி ஆண்டுதோறும் உலக அகிம்சை தினமாக கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஆண்டனியோ குட்டேரஸ், இன்று அமைதி, மரியாதை மற்றும் அத்தியாவசியமான கண்ணியம் ஆகியவற்றின் மதிப்புகளை அனைவரும் பகிர்ந்து கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த மதிப்புகளைத் தழுவி, கலாச்சாரங்கள் மற்றும் எல்லைகளைக் கடந்து, சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதன் மூலமாக நாம் இன்றைய சவால்களை தோற்கடிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்