இந்திய கால்பந்து கிளப்கள் மீது பாய்ந்த சூதாட்ட புகார் - சிபிஐ தொடங்கிய அதிரடி விசாரணை..!

x

இந்தியாவைச் சேர்ந்த 5 கால்பந்து கிளப்கள் மீது சூதாட்ட புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, முதற்கட்ட விசாரணையை சிபிஐ தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியில் உள்ள அனைந்திந்திய கால்பந்து சம்மேளனத்தில், சமீபத்தில் சோதனையில் ஈடுபட்ட சிபிஐ, சூதாட்ட புகார் குறித்து 5 கால்பந்து கிளப்களின் ஆவணங்களைப் பறிமுதல் செய்தது.

சூதாட்ட புகாரில் சிக்கியுள்ள 5 கால்பந்து கிளப்களுக்கும், சிங்கப்பூரைச் சேர்ந்த சர்வதேச இடைத்தரகர் வில்சன் ராஜ் பெருமாளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட கிளப்களின் உரிமையாளர்கள், விளம்பரதாரர்கள், முதலீடுகள் தொடர்பான ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றிது.

புகாரில் சிக்கியுள்ள கிளப்கள் ஐ-எல் கால்பந்து தொடரில் பங்கேற்றதாக கூறப்படும் நிலையில், சூதாட்ட புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை சிபிஐ தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்