"இனி திங்கள் தோறும் ஆய்வுக் கூட்டம்.. குண்டர் சட்ட நடவடிக்கை" - கலெக்டர்களுக்கு முதல்வர் அதிரடி உத்தரவு

x

கள்ளச்சாராயம், போதைப்பொருள் தடுப்பு குறித்து திங்கள்கிழமை தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்தி முதலமைச்சர் அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்புமாறு ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்,

காவல்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம், தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டுமென்றும்,

இதனை பள்ளிகள், கல்லூரிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும்

சுயஉதவிக்குழு மகளிரைக் கொண்டு நடத்திட வேண்டுமென்றும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

தொழிற்சாலைகளில் எரிசாராயம் மற்றும் மெத்தனால் பயன்பாட்டை கண்காணித்து,

அது விஷச் சாராயம் காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை,

காவல் துறை மற்றும் கலால் உதவி ஆணையர் கண்காணிக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

கள்ளச்சாராயம், போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக திங்கள் தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்திட வேண்டும் என்றும், அந்த அறிக்கையை மாவட்ட ஆட்சியர்கள் முதலமைச்சர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

மாநில எல்லைப் பகுதிகள், கடலோர மற்றும் மலைப்பகுதி மாவட்டங்களில்,

மாவட்ட அளவிலான மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் சிறப்பாகச் செயல்படும் உயரதிகாரிகளை நியமிக்க வேண்டுமென்றும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

மதுவிலக்கு தொடர்பாக தகவல் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 பயன்பாட்டில் உள்ளதை,

மக்களிடையே பிரபலப்படுத்தி, ஒவ்வொரு மாவட்​ட​த்திலும் உள்ள உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும்

துணை காவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு அமலாக்கத்துறை ஆகியோரின் வாட்ஸ்அப் எண்களை அறிவிக்க வேண்டும்.

அதன்மூலம் பெறப்படும் புகார்களை மதுவிலக்கு அமலாக்க கூடுதல் காவல்துறை இயக்குநர் கண்காணித்து,

உடனுக்குடன் எடுக்கும் தொடர் நடவடிக்கையை உறுதி செய்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்


Next Story

மேலும் செய்திகள்