நேப்பியர் பாலம் முதல் லைட் ஹவுஸ் வரை..சென்னையில் அடுத்த பிரமாண்டம் - மேயர் பிரியாவின் அதிரடி அப்டேட்

x

கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் பெற்று, நேப்பியர் பாலம் - கலங்கரை விளக்கம் இடையே ரோப் கார் திட்டத்தை நடைமுறை படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியின் மன்ற கூட்டம் ரிப்பன் வளாக கட்டிடத்தில் நடைபெற்றது.

அப்போது வார்டு உறுப்பினர் ஒருவர், நேப்பியர் பாலம் - கலங்கரை விளக்கம் இடையே 'ரோப்கார்' திட்டத்தை கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று ஆலோசனை கூறினார்.

அதனை தொடர்ந்து பேசிய மேயர் பிரியா , இது ஒரு நல்ல திட்டம் என்றும் கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் வாங்கிய பிறகு, மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற் கொள்ளப்படும்' எனவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்