இன்ஸ்டாகிராம் டு வீடியோ கால் வரை... கடைசியில் வெளிவந்த இளைஞரின் உண்மை முகம்

x

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த 17 வயதான பெண்ணுக்கும், சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சிவா என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தங்கள் தனிப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில், இருவரும் வீடியோ காலில் பேசிய போது, சிவா வேறு ஒரு நபரின் புகைப்படத்தை பகிர்ந்து ஏமாற்றியதை அப்பெண் அறிந்து கொண்டார். இதைத் தொடர்ந்து, அப்பெண்ணை ஏமாற்றி ஆபாசமாக பேசியதன் குற்றத்தின் பேரில், போலீசார் சிவாவை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்