2009 முதல் 2014 வரை.... சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகளை தட்டி சென்ற படங்ககள்
தமிழக அரசின் சார்பில் 2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரை, சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில், 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த படமாக பசங்க திரைபடத்திற்கு முதல் பரிசும், மாயாண்டி குடும்பத்தார் படத்திற்கு 2-ம் பரிசும், அச்சமுண்டு அச்சமுண்டு படத்திற்கு 3-ம் பரிசும் வழங்கப்பட்டது.2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த படத்திற்கான விருதை பொருத்தவதை மைனா முதல் பரிசும், களவாணி 2-ம் பரிசையும், புத்ரன் மூன்றாம் பரிசை பெற்றது.2011 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் முதல் 3 விருதினை, வாகை சூடவா, தெய்வத்திருமகள், உச்சிதனை முகர்ந்தால் ஆகிய படங்களுக்கும், மெரினா படத்திற்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.2012 ஆம் ஆண்டின் சிறந்த படமாக வழக்கு எண் 18 இன் கீழ் ஒன்பதுக்கு முதல் பரிசும், சாட்டை படத்திற்கு 2வது பரிசும், மூன்றாம் பரிசு தோனி மற்றும் சிறப்பு பரிசு கும்கி படத்துக்கும் வழங்கப்பட்டது.2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த படம் என ராமானுஜம் திரைபடத்திற்கு முதல் பரிசும், தங்கமீன்கள் படத்திற்கு 2-ம் பரிசும், பண்ணையாரும் பத்மினியும் படத்திற்கு 3-ம் பரிசும், ஆள் படத்திற்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.2014 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் முதல் 3 விருதினை, குற்றம் கடிதல், கோலிசோடா, நிமிர்ந்து நில் ஆகிய படங்களுக்கும், காக்கா முட்டை படத்திற்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது