கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி... புதுச்சேரியில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை... கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

x

புதுச்சேரி மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, 1 முதல் 9 ஆம் வகுப்பு தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். கோடை வெயில் அதிகரித்து வருவதால், சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் ரங்கசாமியுடன், நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வு, 11 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை முன்கூட்டியே தேர்வுகள் நடத்தப்படும் என்றார். மேலும் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படுவதாகவும், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்