சிறையில் மலர்ந்த நட்பு - மீண்டும் சிறைக்கு சென்ற நட்புகள்

x

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே லாரி கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல் பல்லக்காபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார்.

இவருக்கு சொந்தமான லாரி ஒன்று திருடு போயுள்ளது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், வாகன தணிக்கையின் போது தினேஷ் குமாரின் லாரியை பறிமுதல் செய்தனர்.

மேலும் லாரி கடத்தலில் ஈடுபட்ட கண்ணன், ஜேசுராஜ், கவியரசன் ஆகியோரிடத்தில் விசாரணை மேற்கொண்டதில் , மூவரும் சிறையில் நண்பர்களாகியதும், விடுதலை ஆகிய பின்னர் மீண்டும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட தொடங்கியதும், தெரியவந்துள்ளது.

தொடர்ந்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்