மது போதையில் சரித்திர பதிவேடு குற்றவாளியை அடித்து கொன்ற நண்பர்கள் ....

மது போதையில் சரித்திர பதிவேடு குற்றவாளியை அடித்து கொன்ற நண்பர்கள் ....
x

திருவள்ளூர் மாவட்டத்தில் சாலையில் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த சரித்திர பதிவேடு குற்றவாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பொன்னேரி அடுத்த பெரவள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் 22 வயது இளைஞர் சரத்குமார். இவருக்கு திருமணமாகி ஒரு வயதில் ஆண்குழந்தை ஒன்று உள்ளது. மேலும், கொலை முயற்சி உட்பட சில வழக்குகளில் சிக்கி காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் சரத்குமார் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 14 ஆம் தேதி போகிப்பண்டிகை அன்று சாலையில் பலத்த காயமடைந்து கிடந்த சரத்குமாரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து, புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரனை நடத்தி வந்த நிலையில், நண்பர்களுடன் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் சரத்குமார் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சரத்குமார் உயிரிழந்த நிலையில், அவரின் நண்பர்கள் சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்