குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பன் தலையில் கல்லை போட்டு கொன்ற நண்பர்கள் - மதுரையில் பயங்கரம்

x

மதுரை, பெரியார் பேருந்து நிலையம் அருகே திடீர் நகரில் வசித்து வந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சதக் அப்துல்லா. இவர் பேருந்து நிலையம் அருகே, நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது, நண்பர்களுக்குள்ளே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாக தெரிகிறது. இதில், சதக் அப்துல்லாவின் தலையில் கல்லை போட்டு நண்பர்கள் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், பலத்தகாயமடைந்த சதக் அப்துல்லா சம்பவ இடத்திலயே உயிரிழந்த நிலையில், தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து, சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்