பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் நட்சத்திர வீரர் நடால் விலகல்... காரணம் என்ன?

x


பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இருந்து ஸ்பெயினைச் சேர்ந்த முன்னணி வீரர் ரஃபேல் நடால் விலகி உள்ளார்.

ஆண்டின் 2வது கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ்சு ஓபன் தொடர் வருகிற 22ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தொடங்க உள்ளது. சமீபத்திய டென்னிஸ் தொடர்களில் காயம் காரணமாக பங்கேற்காத நடால், பிரெஞ்சு ஓபனில் இருந்தும் விலகி உள்ளார். நடப்பு தொடரில் பங்கேற்றால் காயம் அதிகரிக்கும் என கவலை தெரிவித்துள்ள நடால், அடுத்த ஆண்டு ஓய்வு பெற திட்டமிட்டு இருப்பதாகவும் கூறி உள்ளார். 14 முறை பிரெஞ்சு ஓபனில் மகுடம் சூடியுள்ள நடால், தொடரில் பங்கேற்காதது அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்