MP, MLA-களுக்கு கட்டணமில்லா பயணம்' | இனி AC பஸ்ஸில் ஜாலியாக செல்லலாம்' | போக்குவரத்துத்துறை அதிரடி உத்தரவு..!

x

குளிர்சாதன பேருந்துகளில் எம்.பி, எம்.எல்.ஏக்கள் கட்டணமில்லாமல் பயணிக்க வரும்போது, புகார் எதுவும் எழாத வகையில் பணியாற்றுமாறு ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது...

மாநகர போக்குவரத்துக் கழகத்தின் குளிர்சாதன பேருந்துகளில் தமிழக சட்டப்பேரவை, நாடாளுமன்ற இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் சட்ட மேலவை முன்னாள் உறுப்பினர்களை கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்குமாறு ஏற்கனவே உத்தரவிடப்பட்டது. எனினும் இந்த உத்தரவு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர்கள் தனியாகவோ, துணைவர் அல்லது துணைவியுடனோ, ஓர் உதவியாளருடனோ, அடையாள அட்டையுடன் வரும்போது, அவ்ர்களைக் கட்டணமில்லாமல் பயணிக்க ஓட்டுநர், நடத்துநர்கள் அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அண்ணாநகர், மத்திய பணிமனை, பெரும்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய பணிமனைகளின் கிளை மேலாளர்கள், மேற்கூறிய உறுப்பினர்கள் மாநகர போக்குவரத்துக் கழக குளிர்சாதன பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள வரும்போது, அவர்களை கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்க வேண்டும் எனவும், அவர்களிடம் மரியாதையுடனும், கனிவுடனும் நடந்து கொள்வதுடன் எவ்வித புகாரும் எழா வண்ணம் பணியாற்றுமாறும் அறிவுறுத்த வேண்டும் என மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் சுற்றறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்