நகைக்கடையில் இலவச அரிசி டோக்கன்..! திடீரென குவிந்த மக்கள் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு

x

காரைக்காலில் உள்ள பிரபல நகைக்கடையில், வாடிக்கையாளர்களை கவரும் வகையில், இலவச அரிசி மூட்டை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான டோக்கன் கடையில் வழங்கப்பட்ட நிலையில், அதனை பெறுவதற்கு பொதுமக்கள் முண்டியடித்தனர். சுமார் 500க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காரைக்காலில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்டோர் கூடியது பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்