அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச முடி திருத்தம்.. பெற்றோர்கள் மகிழ்ச்சி

x

திருத்தணியில் பள்ளிக்கு சீராக முடிவெட்டாமல் வந்த மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சார்பில் இலவச முடிதிருத்தம் செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கே.ஜி.கண்டிகையில் அரசு மேல் நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இங்கு சீராக முடிவெட்டாமல் காணப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரமேஷ் சார்பில் இலவச முடிதிருத்தம் செய்யப்பட்டது.

பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரின் இச்செயல் அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது.


Next Story

மேலும் செய்திகள்