மருத்துவ கல்லூரியில் 'சீட்' வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் மோசடி - தாய், மகள் கைது | chennai
மருத்துவக் கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக கூறி கோடி கணக்கில் மோசடி செய்த தாய், மகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையைச் சேர்ந்த ஜோசப் இளங்கோ என்பவர், தனது மகளுக்கு அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.எஸ் சீட்டு வாங்கி தருவதாக கூறி, 90 லட்சத்தை மோசடி செய்துவிட்டதாக, சசிகலா, ரம்யா ஆகிய இருவர் மீது புகாரளித்திருந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே எம்.பி.பி.எஸ் சீட்டு வாங்கி தருவதாக கூறி, சுமார் 28 லட்சத்தை மோசடி செய்ததாக புகாரளிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், தாய், மகளான சசிகலா மற்றும் ரம்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story