"பல கோடி ரூபாய் மோசடி.." - பிரபல தனியார் நிறுவனம் மீது புகார்

x

வத்தலக்குண்டு நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மகளிர் குழுக்களுக்கு வங்கிகளில் கடன் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், 2019-ம் ஆண்டுக்கு பிறகு மகளிர் குழுக்களிடம் வசூல் செய்த பணத்தை, அந்த நிறுவனம், வங்கிகளில் செலுத்தாமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, பணத்தை செலுத்த கோரி, வங்கியிலிருந்து மகளிர் குழுக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் தங்களது பணத்தை மீட்டுத்தரக்கோரி, குடும்பத்துடன் வத்தலகுண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்