நான்கு வழி சாலை... கோயில் இட மாற்றம் -திடீரென சாமியாடிய ஆண்கள் - குண்டு கட்டாக தூக்கி சென்ற போலீஸ்

x

நெல்லை தென்காசி நான்கு வழி சாலை பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாவூர்சத்திரம் அருகே உள்ள நவநீதகிருஷ்ணபுரத்தில் சாலையோரம் அமைந்துள்ள மிகப் பழமையான மூனால்முப்புடாதி அம்மன் கோவிலை, வேறு இடத்திற்கு மாற்றவும், கோவிலை ஒட்டி நின்ற ஆலமரத்தையும் அகற்றவும் போலீசார் உதவியுடன் அறநிலையத்துறை அதிகாரிகள் வந்தனர். கோயிலில் உள்ள பீடங்களை அதிகாரிகள் எடுத்துச் செல்லும் போது, திடீரென பெண் மற்றும் ஆண்கள் சாமி ஆடினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் சாமி ஆடியலர்களை குண்டு கட்டாக தூக்கிச் சென்றனர். தொடர்ந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பீடங்களை மாற்றியதோடு, ஆலமரத்தையும் ஜேசிபி கொண்டு அகற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்